Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் மாரியம்மன் கோயில் ... பழநி முருகனுக்கு செலுத்தினாலும் வீடுவரை தொடரும் காவடி பயணம்! பழநி முருகனுக்கு செலுத்தினாலும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி விழா கோயில்களில் பூஜை; பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 பிப்
2015
02:02

தேனி : மாசி மகாசிவராத்தியை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தேனியில் வீரப்பஅய்யனார் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கணேசகந்தபெருமாள் கோயில், தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. மகாசிவராத்திரி விரதம் முடித்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

தவிர ஆண்டிபட்டி, குருவியம்மாள்புரம், வேலப்பர்கோயில், வெங்கடாச்சலபுரம், கோவிந்த நகரம், அம்பாசமுத்திரம், சீப்பாலக்கோட்டை, சீலையம்பட்டி உட்பட பல்வேறு கோயில்களில் உள்ள குலதெய்வங் களுக்கு பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தேவாரம், உத்தமபாளையம், கம்பம், தேனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தென்மாவட்டங்களில் உள்ள தங்கள் குலதெய்வம் கோயில் களுக்கு சென்று வழிபட்டனர்.உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் மகாசிவராத்திரி விழா பிப்., 10 முதல் துவங்கி நடந்து வருகிறது. 1008 அகல்விளக்கு பூஜை நடத்தப்பட்டது.

இதில் நவராத்திரி பெண்கள் குழுவினரும், பிறந்த வீட்டுபிள்ளைகளும் பங்கேற்றனர். தொடர்ந்து துலாபாரம், லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலதிரிபுரசுந்தரிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. திருவிளக்கு பூஜை, மாலை அம்மன் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 7 சிறு பெண் களுக்கு அன்னமிடல், அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம் நடை பெற்றது. இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. விழா விற்கான ஏற்பாடுகளை மூங்கில் அன்னை காமாட்சியம்மன் சேவா அறக்கட்டளை தலைவர் பொன் கனகராஜ், செயலாளர் முருகேசன், பொருளாளர் நாராயணசாமி, பட்டத்து பூஜாரி பெருமாள், பொன்நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

பெரியகுளம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், கைலாசநாதர் கோயில்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பெரியகுளம் பகுதியில் ஏராளமானோர் குலதெய்வம் கோயில்களில் வழிபாடு நடத்தினர். "தாரை தப்பட்டை இகை பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் பயறு வகைகளான மொச்சை, தட்டை, சுண்டல், பட்டாணி, பாசிப்பயறு உள்ளிட்ட பயறுகளை அவித்து சிவனுக்கு படைத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar