செஞ்சி: செஞ்சி அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவசையை முன்னிட்டு தில ஹோமம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. இரவு 7 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து, தில ÷ ஹாமம் நடந்தது. இரவு 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கல நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், சிறப்பு அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.