பதிவு செய்த நாள்
20
பிப்
2015
12:02
பூங்கா நகர்: பூங்கா நகரில் உள்ள, யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகரில், யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், வியாழக்கிழமைதோறும், யோக ஞான தட்சிணாமூர்த்திக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று காலை 9:30 மணிக்கு, அபிஷேகம் துவங்கியது. பாலாபிஷேகம் முடிந்ததும், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. இதில், திருவள்ளூர், காக்களூர், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.