Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆழத்து விநாயகர் நால்வருடன் உலா! பெரிய குருநாத ஸ்வாமி கோவில் கட்டிட திருப்பணிகள் தீவிரம் பெரிய குருநாத ஸ்வாமி கோவில் கட்டிட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
6 ஆண்டுக்கு பின் மாசானக்கொள்ளை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
6 ஆண்டுக்கு பின் மாசானக்கொள்ளை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பதிவு செய்த நாள்

21 பிப்
2015
11:02

ராசிபுரம்: அங்காளபரமேஸ்வரி கோவிலில், ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த மாசானக்கொள்ளை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன், பெரியாண்டிச்சி மற்றும் பேச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மாசி சிவராத்திரையை முன்னிட்டு, "மாசானக் கொள்ளை நடத்தப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு விழா, கடந்த, 8ம் தேதி துவங்கியது. அன்று, உற்வச மூர்த்திகள் சிவன் கோவிலில் இருந்து அழைத்து வருதல், சிறப்பு அபிஷேகம், கொடியேற்றுதல், அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.அதை தொடர்ந்து, 16ம் தேதி வரை, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு, 7 மணிக்கு, ரிஷிபம், யானை, கிளி, புலி, அன்னம், காமதேனு, குதிரை, மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேலும், அம்மன் அழைத்தல், குண்டம் பற்ற வைத்தல், பூவாங்குதல், முகமட்டு கப்பரை எடுத்தல், அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. அதையடுத்து, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.நேற்று "மாசானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து, சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை, ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி அருகில் உள்ள மயானத்திற்கு, மாலை, 6 மணிக்கு சென்றனர். அங்கு பூசாரியால் சேமித்து வைக்கப்பட்டிருந்த, மண் உருவ சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்களால் அம்மனுக்கு படைக்கக்கப்பட்ட சாதத்தை, பூசாரி சாப்பிட்டார். அதைதொடர்ந்து, பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆடு, கோழிகளை, பூசாரி உயிருடன் கடித்து ரத்தத்தை குடித்து, மண் உருவத்திற்கு பலி கொடுத்தார். பின்னர், ஊர்வலமாக திரும்பி, ராசிபுரம் செல்லியம்மன் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, காளி வேடம் அணிந்த பூசாரி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். ஆறு ஆண்டுகளுக்கு பின், இந்த மாசானக் கொள்ளை நடந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar