நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வான்பாக்கம் சாலையில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. கடந்த 13ம் ÷ ததி காப்புக் கட்டுதலுடன் உற்சவம் துவங்கியது. தினமும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மய õனக்கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பலர் காளி வேடமணிந்து மயானத்துக்குச் சென்று சாம்பலில் விழுந்து புரண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். மயானத்தில் அங்காளம்மன் எழுந்தருளி விவசாயிகள் விளைபொருட்களையும் வியாபாரிகள் உணவு பொருட்களையும் பக்தர்கள் நாணயங்களையும் வாரி இறைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.