Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரை நிர்வாணத்துடன் குறி சொல்லும் ... புற்றுமண், தானியங்களால் 208 சிவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் வாகனம் நிறுத்த அடாவடி வசூல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
12:02

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி சிவராத்திரி திருவிழா வில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் கேட்டு அடாவடி செய்கின்றனர். கட்டண ரசீதில் அலுவலக முத்திரை இல்லை. தொகை கையால் எழுதப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்., 17 ல் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் இருசக்கர வாகனம், கார்களில் வந்து செல்கின்றனர். இருசக்கர வாகனத்திற்கு ரூ. 20 மற்ற வாகனங்களுக்கு ரூ.25 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூல் செய்து கொள்வதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டது. ஆனால் ஏலம் எடுத்தவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.50, கார் ஒன்றுக்கு ரூ.100, லாரிக்கு ரூ.150 என இஷ்டத்திற்கு வசூல் செய்கின்றனர். வாகனங் களில் வரும் பக்தர்கள் ஏன் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டால் மிரட்டப்படுகின்றனர். நுழைவு கட்டண ரசீதில் அலுவலக முத்திரை இல்லை. தொகை அச்சிடப்படாமல் பேனாவால் எழுதப்பட்டுள்ளது. அரசு நிர்ணய தொகைக்கு கூடுதலாக பணம் வசூல் செய்துவரும் ஏலதாரர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். ஆண்டிபட்டியை சேர்ந்த பக்தர் தாமோதரன் கூறுகையில், ""குடும்பத்துடன் சுவாமி கும்பிட வரும் போது இவர்களின் அடாவடி வசூல் மிகவும் வேதனையாக உள்ளது. அதிகாரிகளிடம் கூறினால் யாரும் கண்டு கொள்ளவில்லை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar