பதிவு செய்த நாள்
23
பிப்
2015
12:02
விருத்தாசலம்: சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், சித்தி விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர் அருள்பாலித்தார். அதே போல், ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தன விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ரயில்வே குடியிருப்பு விநாயகர், கடலூர் ரோடு விஜய விநாயகர், பெரியார் நகர் வினை தீர்த்த சக்தி விநாயகர், செல்வ விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.