பதிவு செய்த நாள்
23
பிப்
2015
12:02
ஆனைமலை: ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், புலவர் விஜய சிவக்குமாரின்,மகாபாரத தொடர் சொற்பொழிவு, கடந்த 18 ம் தேதி முதல் நடந்து வருகிறது.ஆனைமலை, திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, வரும், 7 ம்தேதி நடக்கிறது. இதையடுத்து கடந்த 18 ம் தேதி முதல் வரும், மார்ச் 4 ம் தேதி வரை, தினமும், இரவு 8.10 மணி முதல், மகாபாரத தொடர் சொற்பொழிவு நடக்கிறது.அதன்படி, நேற்றைய சொற்பொழிவில், பாண்டவர் காசியை அடைதல் பற்றி சொற்பொழிவு நடந்தது. இன்று அரங்கு மாளிகை பற்றி சொற்பொழிவு நடைபெறுகிறது.