திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். விழாவை முன்னிட்டு ஆதிபராசக்தி அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் அருள்பாளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.