மதுரை நன்மை தருவார் கோயிலில் மாசித்திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2015 05:02
மதுரை: மதுரை மேலமாசி வீதியிலுள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கடந்த திங்களன்று பூமி பூஜைக்கு பின் கொடியேற்றம் செய்யப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் அலங்கரித்து முதல் நாள் கோயில் பிரகாரத்திலும் மறுநாள் மாசி வீதியிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான நிர்வாகமும், ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும் செய்து வருகின்றனர்.