Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை நன்மை தருவார் கோயிலில் ... திருப்போரூர் கந்தசுவாமி மாசி கிருத்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்! திருப்போரூர் கந்தசுவாமி மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழா!
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத கிருத்திகை விழா!

பதிவு செய்த நாள்

26 பிப்
2015
11:02

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த மாசி மாத கிருத்திகை திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை   வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த, 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும், காலை, இரவு நேரங்களில் உற்சவ பெருமான் ஒவ்வொரு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில், மாடவீதிகளில் வீதியுலா வந்து   பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  

நேற்று, மாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும்   பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு   தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து,   பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்   மற்றும் தீபாராதனை நடந்தன. இரவு 7:00 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்திலும், இரவு 8:00 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், உற்சவ   பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயி  ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூன்றரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar