Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி மாசி ... தங்க காப்பு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்! தங்க காப்பு அலங்காரத்தில் கோட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு!

பதிவு செய்த நாள்

26 பிப்
2015
11:02

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும். ஒரு மாதம் நடைபெறும் இத்திருவிழாவை அறிவிக்கும் வகையில், கடந்த 17ல் நோன்பு சாட்டுதல் நடைபெற்றது. இதையடுத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற துவங்கின. இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு மேல் கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், மூன்று கிளைகள் உடைய மரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை சரியாக வடிவமைத்து, மஞ்சள் பூசி கோவில் தலைவாயில் முன்பு நடப்பட்டது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் முகக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

நேற்று காலை முதல் பொள்ளாச்சி பகுதி பெண்கள், தங்கள் வீடுகளில் இருந்து குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து, நடப்பட்டிருந்த கம்பத்துக்கு அபிேஷகம் செய்து சென்றனர். இதற்கு பிறகு, அடுத்த மாதம், 3ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைக்கப்படும்.தொடர்ந்து, 6ம் தேதி முதல் வெளிப்பூவோடு ஆரம்பமாகும். அன்று இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி செய்யப்படும். தொடர்ந்து, 7ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். அடுத்து, 11ம் தேதி காலை, 6:00 மணி முதல் பெண்களால் அம்மனுக்கு மாவிளக்கு கொண்டு வரப்படும். தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று இரவு, 7:00 மணிக்கு அம்மன் வெள்ளித்தேரில் திருவீதியுலா வருவார். மார்ச், 12ல், 7:00 மணிக்கு இரண்டாம் நாள் தேரோட்டம், 13ம் தேதி இரவு, 7:00 மணி முதல் மூன்றாம் நாள் தேரோட்டத்தில், தேர்நிலைக்கு வந்து சேரும். அன்று இரவு பரி வேட்டை, தெப்பத்தேர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.அடுத்து, 14ம் தேதி காலை, 8:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நடைபெறும். அடுத்த மாதம், 16ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகத்துடன் திருவிழா சாட்டு முடிவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar