Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நைனாமலையில் மாசி மக தேரோட்டம்! 969 கோவில்களில் வில்வ மரக்கன்று நடவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரப்பூர் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழா: இன்று வேடபரி உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2015
12:02

மணப்பாறை: மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன், பொன்னர், சங்கர் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழாவில், வேடபரி நிகழ்ச்சி இன்று (26ம் தேதி) மாலை நடக்கிறது.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரை மையமாகக் கொண்டு, பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அண்ணன்மார் வீரவரலாற்றில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில், வளநாடு, நெல்லிப்பட்டி நெல்லியம்மன் கோவில், வெள்ளாங்குளத்தூர், படுகளம், கூவண்ணாம்பள்ளம், வெண்முடி, வீரப்பூர், அணியாப்பூர் ஆகியவை முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.கொங்குநாட்டு மக்கள், குலதெய்வமாக வழிபடும் இக்கோவில்களில் குன்னுடையான், தாமரைநாச்சியார், பொன்னர், சங்கர், தங்காள் ஆகிய நடமாடும் தெய்வங்களும், பெரியக்காண்டியம்மன் என்ற கன்னிமாரம்மன், செல்லாண்டியம்மன், நெல்லியம்மன் ஆகிய அன்னைபரமேஸ்வரியின் அவதார தெய்வங்களும் வீற்றிருக்கின்றனர். மந்திரம் காத்த மகாமுனி, கருப்பண்ண ஸ்வாமி, மதுரை வீர ஸ்வாமி, காத்தவராயன், சந்தனக்கருப்பு, கோட்டைமுனி, சடையாண்டிமுனி, வீரபாகு சாம்புவன், சப்தகன்மார், 68 பூதகணங்கள் ஆகிய பரிவாரதெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

வீரப்பூரில் நடக்கும் திருவிழாவை ஒட்டியே, அண்ணன்மார் ஸ்வாமிகளின் மற்ற கோவில்களிலும் திருவிழா கொண்டாடப்படுகிறது. வீரப்பூரில், ஆண்டுதோறும் மாசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து, பத்து நாட்கள் விழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா கடந்த, 19ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு, படுகளத்தில் அம்மன்பவனி வருதல், படுகளம் சாய்தலும், பின் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று மாலை, 6 மணிக்கு வீரப்பூரில் வேடபரி குதிரைத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. காளை மாட்டின் மீது சாம்புவன் முன்செல்ல, பொன்னர் பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் கையில் அம்புஏந்தி பின் செல்ல, அதன் பின் வெள்ளை யானை வாகனத்தின் மீது பெரியகாண்டியம்மன் அமர்ந்து செல்லவும் கடைசியில் தங்காள் குடத்தில் தீர்த்தம் எடுத்து சென்று அனியாப்பூர் குதிரைக்கோவிலில் அம்பு போடும் வேடபரி நிகழ்வு நடக்கிறது. நாளை (27ம் தேதி) காலை, 10.30 மணிக்கு கன்னிமாரம்மன் திருத்தேர் வடம்பிடித்தல் விழாவும் நடக்கிறது. விழாவில் திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன் ஊர் முக்கியஸ்தர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar