பந்தலூர் : ‘மக்கள் ஆன்மிக வழியில் சென்றால் மட்டுமே சண்டையில்லா சமூகம் வளரும்’ என, அறிவுறுத்தப்பட்டது. பந்தலூரில் பிரம்ம குமாரிகள் ஈஸ்வரியம் சார்பில் சிவராத்திரி சிறப்பு பிரார்த்தனை மற்றும், 79வது சிவ ஜெயந்தி நிகழ்ச்சி நடந்தது. கூடலூர் கிளை நிலைய பொறுப்பாளர் ரேணுகா வரவேற்றார். இறைவணக்கத்துடன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பிரார்த்தனை நடத்தப்பட்டு ஆன்மிக சொற்பொழிவாற்றப்பட்டது. இதில், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்வரி பேசுகையில், “மக்கள் ஆன்மிக வழியில் சென்றால் மட்டுமே சண்டையில்லா சமூகம் வளரும்,” என்றார். நிர்வாகி சரஸ்வதி, டாக்டர்கள் லோகநாதன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.