பதிவு செய்த நாள்
27
பிப்
2015
11:02
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தியாக துருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா மகாசிவராத்திரி தினமான கடந்த 17ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சர்வ அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. நேற்று காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர் கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். அம்மன் சிலை அலங்கரித்து திருத்தேரில் வைத்து ஆராதனைகள் நடந்தது. மாலை 4.50 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா, முன்னாள் ஒன்றிய செய லாளர் வைத்திலிங்கம், துணைசெயலாளர் ராஜ@வல், ஊராட்சி மன்ற தலைவர்கள் வரதம்மாள் ஜெயச்சந்திரன், கோவிந்தராஜ், மணிவண்ணன், முன் னாள் துணைத்தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தர்மகர்த்தாக்கள் கோவிந்தசாமி, பாஞ்சாலை, கண்ணன், பூசாரிகள் தமிழ்ச் செல்வன், குமார், நராயணன், சங்கர் பூஜைகளை செய்தனர்.