பதிவு செய்த நாள்
27
பிப்
2015
12:02
பாகசாலை: பாகசாலை பாலசுப்ரமணியர் கோவிலில், வரும் மார்ச் 2ம் தேதி, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பேரம்பாக்கம் அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் உள்ளது பாலசுப்ரமணியர் கோவில். இந்தாண்டு மாசி பிரம்மோற்சவத்தையொட்டி, 20ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கற்பக விநாயகர் சிறப்பு வழிபாடும், 21ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடும் நடந்தன. அதன்பின், 22ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் மற்றும் பூர்வாங்க நிகழ்ச்சிகளும், இரவு 7:00 மணிக்கு கற்பக விநாயகர் வீதியுலாவும் நடந்தன. தொடர்ந்து, 10 நாட்களுக்கு நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், ஏழாம் திருவிழாவான வினையறுக்கும் வேல் பூஜை, வரும் மார்ச் 1ம் தேதியும், திருக்கல்யாணம், 2ம் தேதி மாலை 6:00 மணிக்கும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம், வரும் 4ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை தீர்த்தவாரியும், இரவு இந்திர விமானத்தில் வீதியுலாவும் நடைபெறும்.