பதிவு செய்த நாள்
27
பிப்
2015
12:02
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள, வேதகிரீஸ்வரர் திருக்கோவிலின் உண்டியலை, அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திறந்தனர். திருக்கழுக்குன்றத்தில், நால்வரால் பாடல் பெற்ற, புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. கடந்த 1ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, ஆண்டுக்கு இரு முறை திறந்து எண்ணுவது வழக்கம். கடந்த ஜூலை மாதம் உண்டியல் திறக்கப்பட்டது. இதையடுத்து, இந்து அறநிலையத் துறை சரக ஆய்வாளர் அலமேலு முன்னிலையில், உண்டியல் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. வேதகிரீஸ்வரர் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள, திருப்பணி உண்டியலில் 2,51,080 ரூபாய், அன்னதான உண்டியலில் 7,452 ரூபாய் என, மொத்தம் 2,58,532 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். செயல் அலுவலர் தியாகராஜன், தக்கார் கேசவராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.