திருச்செந்தூரில் மாசித்திருவிழா: சிவப்பு சாத்தி கோலத்தில் சண்முகர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2015 10:03
துாத்துக்குடி:திருச்செந்துார் முருகன் கோயில் மாசித்திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருச்செந்துார் முருகன் கோயில் மாசித்திருவிழா பிப்., 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் ஏழாம் நாளான நேற்று காலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகருக்கு உருகு சட்ட சேவை நடந்தது. பின் 7.30 மணிக்கு சணமுக விலாச மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின் காலை 9 மணிக்கு சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் சண்முகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீதியுலா வந்து கோயில் சேர்ந்தார். இன்று காலை 7.30 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.மார்ச் 4ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கவுள்ளது.