பதிவு செய்த நாள்
02
மார்
2015
11:03
வாலாஜாபாத்: தாதசமுத்திர தெப்போற்சவத் திருவிழா, நேற்று முன்தினம் இரவு தென்னேரி கிராமத்தில் கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில் ஆண்டுதோறும் தாதசமுத்திர தெப்போற்சவம் நடைபெறும். இந்த விழாவில் காஞ்சி வரதராஜப் பெருமாள், தென்÷ னரி கிராமத்தில் உள்ள ஏரியில் எழுந்தருளி, தெப்பத்தில் பவனி வருவார். நடப்பு, 90வது ஆண்டு தெப்போற்சவத்தை ஒட்டி, நேற்று முன்தினம், காலை, 7:00 மணி அளவில், காஞ்சிபுரத்தில் இருந்து, வரதராஜப்பெருமாள் தென்னேரி வந்தடைந்தார். அப்பகுதிவாசிகள் வரதரை கோலாகலமாக வரவேற்றனர். அதன்பின், வரதராஜப்பெருமாள் கண்ணாடி பல்லக்கில் அயிமிச்சேரி, நாவிட்டான்குளம், திருவங்காரணை, குண்ணவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களில் எழுந்தருளி மண்டகப்படி உற்சவம் நடந்தது. இதில், பல்வேறு கிராம வாசிகள், மா கோலமிட்டு, வரதராஜப்பெருமாளை வரவேற்றனர். இரவு, 8:00 மணி அளவில், மீண்டும் தென்னேரி கிராமத்தை வரதர் வந்தடைந்தார். அவருக்கு சிறப்பு திரு மஞ்சனம் நடந்தது. இரவு, 10:30 மணி அளவில், மலர் அலங்காரத்தில், ஏரியில் தெப்பல் வடிவில் அமைக்கப்பட்டிருந்த, அலங் கார மேடையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு வரதராஜப்பெருமாள் காட்சி அளித்தார். தென்னேரி கிராமத்தை சுற்றியுள்ள கிராமவாசி கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, வழிபட்டு சென்றனர்.