பதிவு செய்த நாள்
02
மார்
2015
11:03
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று லட்சார்ச்சனை நடந்தது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. தற்போது, உலக நன்மை, பகுதிவாசிகள் மேம்பாடு, பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர் ÷ தர்ச்சி ஆகிய வற்றுக்காக, கோவிலில் நேற்று லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை, வழக்கமான வழிபாட்டைத் தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோர், ராஜ அலங்காரத்தில், மகா மண்டபத்தில் எழுந்தருளினர். காலை, 8:30 மணிக்கு, லட்சார்ச்சனை துவங்கியது. மாலை வரை நீடித்த லட்சார்ச்சனையில், அர்ச்சகர்கள், வேத பாராயண மந்திரங்கள் ஓத, பக்தர்களும் பின்பற்றி சங்கல்பம் செய்தனர். மாலையில், குலசேகர ஆழ்வார் சாற்றுமறை, ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபாராதனை ஆகியவற்றுடன், லட்சார்ச்சனை நிறைவடைந்தது.