பதிவு செய்த நாள்
02
மார்
2015
06:03
கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தானில் உலக நலன் வேண்டி தொடர்ச்சியாக 101 நாட்கள் நடைபெற உள்ள ஒரு கோடி புருஷசூக்த ஹோமம் (2ம் தேதி) சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் சுமார் 150 அடி உயர பிரமாண்டமான ருக்மிணி சமேத பாண்டுரங்கன் கோயில் உள்ளது.
இங்கு பெரிய அளவிலான கோசாலையில் தெய்வ பசுக்கள் 500க்கும் மேற்பட்டவை வளர்க்கப்படுகிறது.இக்கோயிலில் உலக நலன் வேண்டி தொடர்ந்து 101 நாட்கள் ஒரு கோ டி புருஷசூக்த ஹோமம் நடத்திட முடிவு செய்யப்பட்டு தனி ஹோமம் மண்டபம் கோயில் சன்னதியில் அமைக்கப்பட்டது. புத்ர பாக்யம் வேண்டுபவர்களுக்கு நம்முடைய முன்னோர்களான ரிஷிகள் சொன்ன முக்கிய பரிகாரம் புருஷசூக்த ஹோமம். விவாஹ ப்ராப்தியும், குடும்ப க்ஷேமமும் ஏற்படுவதற்கு உரிய இந்த புருஷசூக்த ஹோமத்தில் அனைத்து தரப்பு மக்களும் ப ங்கேற்று வழிபட வழிவகை செய்யப்பட்டுள்ளது. (2ம் தேதி) காலையில் பாண்டுரங்கன் சன்னதியில் சிறப்பு பஜனை நடந்த து. தொடர்ந்து திருக்கோவிலுõர் ஞானானந்த தபோவனம் பூஜ்ய ஸ்ரீ சுவாமி நித்யானந்தகிரி அகண்ட தீபம் ஏற்றி ஹோமத்தி னை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தினகர் சர்மா தலைமையில் 40 வேத பண்டிதர்கள் கொண்டு நெல், எள்ளுடன் 60 லிட் டர் நெய்யுடன் முதல் நாள் புருஷசூக்த ஹோமம் நடந்தது. தினமும் ஒரு லட்சம் புருஷசூக்த ஹோமத்துடன் வரும் ஜூன் 10ம் தேதி வரை தொடர்ந்து 101 நாட்கள் ஒரு கோடி புருஷசூக்த ஹோமம் நடக்கிறது. சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த பூஜை மற் றும் ஹோமத்தில் சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராமதீட்சதர், சுப்பிரமணிய தீட்சதர், கோயில் ஸ்தாபகர் விட்டல்தாஸ் மகராஜ், சென்னை கிருஷ்ணகான சபா பிரபு உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு ஹோம குண்டத்தினை வலம் வந்து வழிபட்டனர்.