நெய்வேலி: நெய்வேலி மாரியம்மன் கோவிலில் மாசி மாத சிறப்பு பூஜைகளையொட்டி பெண்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். நெய்வேலி வட்டம் 20ல் உள்ள மாரியம்மன் கோவிலில் வீற்றிருக்கும் கடகள அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் மாசி மாத விழா துவங்கியது. நெ ய்வேலி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பாலகுடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந் தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது.