வால்பாறை: வால்பாறை அன்னை காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று நடந்த திருக்கல்யாணத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை வாழைத்தோட்டம் அன்னை காமாட்சி அம்மன் கோவிலின், 47ம் ஆண்டு திருவிழா, கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று காலை, 10:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலிருந்து, அம்மனுக்கு திருமண சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது. பின், காலை, 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னைகாமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.