விழுப்புரம்: விழுப்புரம் வட்டம், எரிச்சனாம்பாளையம் பச்சைவாழியம்மன் கோவிலில் பவுர்ணமி விழா நடந்தது. எரிச்சனாம்பாளையம் பச்சைவாழியம்மன் கோவிலில் பவுர்ணமி விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவு 12:00 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு உறுப்பினர்கள் வீரப்பன், சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.