Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா! மாகாளியம்மன் கோவிலில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் திருவிழா: பறவைக்காவடி எடுத்து வழிபாடு!
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவில் திருவிழா: பறவைக்காவடி எடுத்து வழிபாடு!

பதிவு செய்த நாள்

09 மார்
2015
12:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர்.  பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 17ம் தேதி திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதனையடுத்து, பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.  மேலும், விழாவையொட்டி கோவில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் தினசரி சிறப்பு பூஜைகளும் நடந்து  வருகின்றன. தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை, 10:30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.   இதன் தொடர்ச்சியாக, கடந்த, 6ம் தேதி முதல் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய, பூவோடு ஏந்தி வழிபாடு செய்து வருகின்றனர்.  இரண்டாம் நாளான நேற்றுமுன்தினம் பத்ரகாளியம்மன் கோவில்வீதி, ஜோதிநகர், சீனிவாசபுரம், கண்ணப்பன்நகர், குமரன் நகர் மற்றும் மார்க்கெட் ரோடு பகுதி பக்தர்கள் பூவோடு எடுத்தனர். இதில், மார்க்கெட் ரோடு பகுதியிலிருந்து பக்தர்கள் நான்கு அடி நீளமுள்ள பறவைக்காவடி ஏந்தியும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.  பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி, பறவைக்காவடி எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சியையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணிகளை முழு வீச்சில் நடத்தி டிசம்பரில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிக்கல்; சிக்கல் வடக்கு தெரு முத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா பத்து நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar