பதிவு செய்த நாள்
24
ஜூன்
2011
11:06
திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் புதிய ராஜகோபுர திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழம்பெருமை வாய்ந்த சரித்திர புகழ்மிக்க பல்வேறு சிறப்புகளை கொண்ட பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. இந்நிலையில் புதிய ராஜகோபுரம் கட்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு உபயதாரர்களால் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 நிலைகளுடன் கூடிய புதிய ராஜகோபுரம் கட்ட திட்டமிடப்பட்டது.அதன் அடிப்படையில் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 2008ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி ராஜகோபுர கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. இதனை தொடர்ந்து திருப்பணிக்குழு தலைவர் ஆர்.வி.எஸ். துரைராஜ் மற்றும் திருப்பணி குழுவினர், உபயதாரர்கள் முயற்சியால் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் சேர்மன் ராமசாமியின் ஒத்துழைப்புடன் மைசூர் மகாதேவர் கருங்கல் திருப்பணி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுர திருப்பணி உட்பட பல்வேறு கோயில்களில் நிர்மான பணிகளை சிறப்பாக செய்த தென்காசி ஸ்தபதி விநாயகமூர்த்தி இக்கோயிலின் ராஜகோபுர நிர்மான பணியை துவக்கினார்.தற்போது 7 நிலைகள் கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளது. 8வது நிலை கட்டுமான பணிக்கான கணபதி ஹோமத்தை கடந்த 19ம் தேதி காலை அர்ச்சகர்கள் பாலமுருகன், கணேசன் நடத்தினர். திருப்பணிக்குழு தலைவர் துரைராஜ், ஸ்தபதிகள் விநாயகமூர்த்தி, மாரியப்பன், 8வது நிலை உபயதாரர் ஐகோர்ட் வக்கீல் கதிர்வேல் துவக்கினர்.ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முனியாண்டி, ஜானகிராமன், ஓய்வு பெற்ற விஏஓ பால்நாராயணன், சண்முகவேல், பெருமாள்பிள்ளை, வையாபுரி, ஹரிகரன்பிள்ளை, வர்த்தகர்கள் குமார், பால்வண்ணம், திருமலைக்குமாரசாமி, ஜெயராஜ், மெடிக்கல் கந்தன் மற்றும் முருகன், முருகேசன், பழனிச்சாமி தேவர், சேவுகடை குருசாமி, நாதகிரி முருகன், டிரைவர் ரவிச்சந்திரன், ரகுநாதன், திருநாவுக்கரசு, துரைபாண்டி, ராமர், முருகன், மேஸ்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.