பதிவு செய்த நாள்
17
மார்
2015
10:03
திருவள்ளூர்: பூங்கா நகர், சிவா - விஷ்ணு கோவிலில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில், மண்டலாபிஷேகம் நேற்று முன்தினம், நிறைவு பெற்றது. திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், சிவா - விஷ்ணு கோவிலில், 46வது சன்னிதியாக சீரடி சாய்பாபா பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, மகா கும்பாபிஷேகம், கடந்த ஜன., 26ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 48 மண்டலாபிஷேகமும், தினசரி காலை, மாலை சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மண்டலாபிஷே நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.