திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று திருவோண தீபம் ஏற்றப்பட்டது. காலை 8 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின், வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா நாமக்கார முனுசாமி செய்திருந்தார்.