பதிவு செய்த நாள்
18
மார்
2015
10:03
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, உற்சவர், நேற்று பூத வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி காலை துவங்கியது. அன்று இரவு, சிம்ம வாகனத்திலும், மறுநாள் அம்ச வாகனத்திலும் உற்சவர் எழுந்தருளினார். நேற்று, காலை, 8:00 மணியளவில், பூத வாகனத்திலும், இரவு அதிகாரநந்தி சேவையிலும் உற்சவர் தீர்த்தீஸ்வரர், திரிபுரசுந்தரி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, நாக வாகனம், இரவு சந்திரபிரபையும் நடக்கிறது. நாளை காலை, மயில் வாகனமும், இரவு ரிஷப வாகனம் மற்றும் பஞ்சமூர்த்தி தரிசனமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, திருக்கல்யாண உற்சவம், வரும் 22ம் தேதி இரவு நடக்கிறது.