பதிவு செய்த நாள்
18
மார்
2015
10:03
தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான், மேல அக்ரஹாரத்தில், ஆலங்குடி சுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ சதக்ரது நிகழ்ச்சி, நேற்று துவங்கியது.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஆலங்குடியில், ஸ்வயம் ப்ரகாசானந்த சரஸ்வதி சுவாமிகள், 1806ம் ஆண்டு பிறந்தார். அவர், ஸ்ரீமத் பாகவதத்தை உபன்யாசம் செய்து வந்தார். பக்தர்கள், அவரை, ஆலங்குடி சுவாமிகள் என்று அழைத்தனர்.சுவாமிகள் மறைவுக்கு பின், கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் கனவில், ஆலங்குடி சுவாமிகள் தோன்றி, பாகவதத்தை உபன்யாசம் செய்யுமாறு அருளினார். இதையடுத்து, நன்னிலம் தாலுகாவுக்குட்பட்ட முடிகொண்டான், மேல அக்ரஹாரத்தில் மடம் உருவாக்கி, எட்டு ஆண்டுகளாக ஆராதனை விழா நடத்தப்படுகிறது. வரும், ஜூன், 1ம் தேதி, ஆலங்குடி சுவாமிகளின், 80வது ஆராதனை விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ சதக்ரது நிகழ்ச்சி நேற்று துவங்கி உள்ளது.
நேற்று காலை, 5:30 மணிக்கு, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, 6:30 மணிக்கு, ப்ருந்தாவன மஹாத்மிய பாராயணம், 8:00 மணிக்கு, ஸ்ரீமத் பாகவத மஹாத்மியம் நடந்தது. இன்று முதல், 23ம் தேதி வரை, ஸ்ரீமத் பாகவத மூலபாராயணம் நடக்கிறது. 23ம் தேதி பகல், 2:00 மணி முதல், 4:00 மணி வரை, மஹிளா மண்டலி ஸ்ரீபிரேமிகா சதகம் சங்கீர்த்தனம், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை உபன்யாசம் நடக்கிறது.இரவு, 6:30 மணி முதல் 7:30 மணி வரை, சந்த்யா ஹாரத்தி, இரவு, 7:30 முதல், 9:30 மணி வரை உபன்யாசம், 9:30 மணி முதல், 11:00 மணி வரை திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோத்சவம் நடக்கிறது. நிறைவு நாளன்று, காலை, 6:30 மணி முதல், 10:00 மணி வரை ஸப்தாஹ பாராயண பூர்த்தி அவப்ருத ஸ்நானம், 10:00 மணி முதல், 12:00 மணி வரை உபன்யாச பூர்த்தி நடக்கிறது. மேற்கண்ட உற்சவத்திற்கு உதவ, பங்கு பெற விரும்புவோர், ஸ்ரீஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா டிரஸ்ட் என்ற பெயருக்கு, டிமாண்ட் டிராப்ட்டோ, குறுக்குக் கோடிட்ட காசோலையோ அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: எஸ்.சங்கரநாராயணன், செயலர், 6/63, (679), மேலத்தெரு, முடிகொண்டான் - 609 502. மொபைல் போன்: 97157 70855 என்ற எண்ணுக்கும், எஸ்.சுவாமிநாதன், மொபைல் போன்: 98402 14759 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.