பதிவு செய்த நாள்
24
ஜூன்
2011
11:06
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சில்லரை காசு, பணம், தங்க நகைள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை எண்ணுவதுக்காக நேற்று காலை 10.30 மணிக்கு ஏழு உண்டியல் திறக்கப்பட்டது. இணை ஆணையர் இளங்கோவன் தலைமையிலும், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் சிவாஜி, நாகை உதவி ஆணையர் கோதண்டராமன், ஆய்வர் மனோகரன், கண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர் முன்னிலையிலும், அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சில்லரை காசுகள், ஐந்து ரூபாய் பணம் மற்றும் நாணயம், 10, 100, 500, 1000 ரூபாய் பணம், வெளிநாட்டு கரன்சி, வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் தாலிகள், வெள்ளியால் ஆன உடல் உறுப்புகள் ஆகியவற்றை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இவை தனி, தனியே தரம் பிரித்தும் எண்ணும் பணியில் மகளிர் உதவிக்குழுவினர், பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். உண்டியலில் பணமாக 10 லட்சத்து 81 ஆயிரத்து 473 ரூபாயும், தங்கமாக 358 கிராமும், வெள்ளியாக 655 கிராமும், அயல்நாட்டு கரன்சி 37ம் இருந்தது.