Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்! காரைக்குடி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரிய ஒளிக்கதிரால் தங்க நிறமாக மாறும் நந்தீஸ்வரர்!
எழுத்தின் அளவு:
சூரிய ஒளிக்கதிரால் தங்க நிறமாக மாறும் நந்தீஸ்வரர்!

பதிவு செய்த நாள்

19 மார்
2015
10:03

வேலூர்: செங்கம் ரிஷபேஸ்வரர் கோவிலில், நந்தீஸ்வரர் மீது, நேற்று முன்தினம், சூரிய ஒளிக்கதிர்கள் பட்டபோது, நந்தீஸ்வரர் தங்க நிறமாக மாறி காட்சி அளித்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில், ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என, வரலாற்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். கோவிலின் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு, மாதந்தோறும், பவுர்ணமி மற்றும் அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜை நடக்கின்றன. கடந்த, 2012ம் ஆண்டு, பங்குனி மாதம், 3ம் தேதி, பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது, கோவில் ராஜகோபுரத்தை கடந்து, நந்தீஸ்வரர் மீது, சூரிய ஒளிக்கதிர்கள் பட்டன. இதனால், சிறிது நேரம் தங்க நிறமாக, நந்தீஸ்வரர் காட்சியளித்தார். இதைக் கண்ட பக்தர்கள், நந்தி பகவானுக்கு, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அன்று முதல், ஆண்டுதோறும், அதே நாளில், ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம், 3ம் தேதியன்று, சூரிய ஒளியானது, கோவிலின் ராஜகோபுரம் மீது பட்டு, பின், நந்தீஸ்வரர் மீது விழுகிறது. அந்த நேரம் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்கிறார். அதன்படி, இந்த ஆண்டு பங்குனி மாதம், 3ம் தேதியான, நேற்று முன்தினம், இந்த கோவிலில், மாலை, 4:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதின. மாலை, 5:40 மணியளவில், சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது விழுந்தது. அப்போது, சிறிது நேரம் தங்க நிறத்தில், நந்தீஸ்வரர் காட்சியளித்தார். அவரை, பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். பின், நந்தீஸ்வரருக்கு, மகா பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar