சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 22ல் பூச்சொரிதல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2015 11:03
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் கடந்த, 8ம் தேதி பூச்சொரிதல் விழா துவங்கியது. ஒரு மாதம் நடக்கும் விழாவையொட்டி, வரும், 22ம் தேதி, தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, அனைத்து சிறுகடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம், அனைத்து கடை வியாபாரிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வியாபாரிகள், தொழிலாளர்கள், கோவில் பணியாளர்கள் சார்பில், 55ம் ஆண்டு, 3வது வார பூச்சொரிதல் விழா நடக்கிறது.