கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்ப÷ ரஸ்வரர், நீலமங்கலம் திருநீற்றம்மை உடனுறை செம் பொற்ஜோதிநாதர், காமாட்சி அம்பிகா சமேத ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதேஸ்வரர், சோமண்டார்குடி லோகாம்பாள் சமேத சோமநாதீஸ்வரர், சடையம்பட்டு கவுரி யம்மன் சமேத கேதாரீஸ்வரர், தென்கீரனுõர் மற்றும் முடியனுõர் அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பாலகுஜாம்பிகா சமேத பசுபதீஸ்வரர் கோவில்களில் பிர தோஷ வழிபாடு நடந்தது. நந்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டது. உற்சவர் சுவாமி சிலைகள் கோவில் பி ரகாரத்தை வலம் கொண்டு வந்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.