மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா பிரத்தியங் கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். அம்மாவாசை ÷ தாறும் இங்கு மிளகாய் வற்ற ல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் மிகவும் சக்தி வாய்ந்தது.இந்த நிகும்பலா யாகத்தில் கலந் து கொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உ பாதை நீங்கி, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.பங்குனி மாத அம்மாவாசையான நேற்று காலை அம்பாளுக்கு சிற ப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து 16 சிவாச்சாரியார்கள் பூஜைகள், ஜபங்கள் நடத் தினர். மதியம் 1 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத் தை நடத்திவைத்தார். யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்து மனமு ருக பிரார்த்தித்து, தரிசனம் செய்தனர். யாகத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளை சங்கர் குரு க்ககள் செய்திரு ந்ததார். நிகும்பலா யாகத்தை முன்னிட்டு அய்யாவாடிக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நாச்சியார்கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.