Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கழுக்குன்றத்தில் நாத உபாசனை ... கருப்பராயன் கோவில் பங்குனி திருவிழா! கருப்பராயன் கோவில் பங்குனி திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு புதிதாக 3 தேர்கள்!
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு  புதிதாக 3 தேர்கள்!

பதிவு செய்த நாள்

21 மார்
2015
11:03

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக 3 தேர்கள்  விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர்  ஆகிய தேர்கள் வரும்  ஏப்.3ம் தேதி வெள்ளோட்டத்தையொட்டி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் திருநள்ளர் தர்பாரண்யே ஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திரு நள்ளாருக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி  விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோத்சவ விழாவில் தேரோட்டத்தில் இரண்டும் தேர்களில்  சுவாமி வீதியுலா நடைபெறும். இந்நிலையில் மேலும் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர்  உள்ளிட்ட  புதிதாக செய்ய 3 தேர் கோவில் நிர்வாகம்  முடிவு செய்யப்பட்டது. இந்த புதிதாக தேர் செய்ய ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. 3 தேர் வரும் டிச.,3ம் தேதி வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேர்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று சிவா எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம்  உள்ளிட்ட அதிகாரிகள்  தேர் செய்யும் பணிகளை பார்வையிட்டனர். மேலும் கோவில்  நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில்.சனிஸ்வர பகவான் நவகிரக ஸ்தலங்களில் ஒன்று இக்கோவிலில் புதிதாக செய்யப்படும் 3 தேர்  பணிகள் நடைபெற்றுவருகிறது. ரூ.80 லட்சம் மதிப்பில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தேர் பணிகள் நடக்கிறது.வரும் ஏப்.3ம் தேதி வெள்÷ ளாட்டத்தையொட்டி பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்று தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar