திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு புதிதாக 3 தேர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2015 11:03
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக 3 தேர்கள் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் வரும் ஏப்.3ம் தேதி வெள்ளோட்டத்தையொட்டி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் திருநள்ளர் தர்பாரண்யே ஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திரு நள்ளாருக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோத்சவ விழாவில் தேரோட்டத்தில் இரண்டும் தேர்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். இந்நிலையில் மேலும் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட புதிதாக செய்ய 3 தேர் கோவில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டது. இந்த புதிதாக தேர் செய்ய ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. 3 தேர் வரும் டிச.,3ம் தேதி வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று சிவா எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் தேர் செய்யும் பணிகளை பார்வையிட்டனர். மேலும் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில்.சனிஸ்வர பகவான் நவகிரக ஸ்தலங்களில் ஒன்று இக்கோவிலில் புதிதாக செய்யப்படும் 3 தேர் பணிகள் நடைபெற்றுவருகிறது. ரூ.80 லட்சம் மதிப்பில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தேர் பணிகள் நடக்கிறது.வரும் ஏப்.3ம் தேதி வெள்÷ ளாட்டத்தையொட்டி பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்று தெரிவித்தார்.