சாமுண்டேஸ்வரி கோயிலில் ஐந்து நாட்கள் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2015 12:03
நாகர்கோவில்: அதிமுக பொது செயலாளர்ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டியும், வழக்குகளில் இருந்து விடுதலை பெற வேண்டியும் குழித்துறை சாமுண்டேஸ்வரி கோயிலில் குமரி மாவட்ட அதிமுக சார்பில் ஐந்து நாள் சிறப்பு யாகம் தொடங்கியது. முதல் மூன்று நாட்களுக்கு பிரத்யங்கரா யாகமும், 23-ம் தேதி மகாசுதர்சன யாகமும் நடக்கிறது. தொடக்க விழாவில் மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம், அவை தலைவர் சிவகுற்றாலம், துணை செயலாளர் சலாம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.