திருவதிகை: திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனையொட்டி காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்தயபடி பூஜை, 9:00 மணிக்கு பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்தியபடி பூஜை, இரவு 8:30 மணிக்கு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடும், 9:30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடந்தது.