பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் யகாதி பண்டிகை முன்னிட்டு உற்சவர் ராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா லித்தார். அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு உற்சவர் ராமர், லட்சுமணர், சீதா, அனுமன் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந் தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து உற்சவர் கோதண்டராமர், லட்சுமணர், சீதை, அனுமனுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.