விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு, ரேணுகா பரமேஸ்வரிஅம்மன் கோவிலில், அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.