பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில், பூச்சொரிதல் விழா நடைபெற்றது.புதுக்கோட்டை அருகே நாரதர் மலை என்ற இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முத்துமாரியம்மனுக்கு, கடந்த 22ம் தேத இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி, புதுக்கோட்டை மற்றும் நார்த்தாமலை சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இரவு, 7 மணியிலிருந்து அதிகாலை, 5 மணி வரை மின் அலங்கார வாகனங்களில் பூக்களை எடுத்துச் சென்று, அம்மனுக்கு சார்த்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பங்குனிப் பெருந்திருவிழா வரும், 29ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி, 10 நாட்கள் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயப்பிரியா, செயல் அலுவலர் கருணாகரன், மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி, ஆய்வாளர் லெட்சுமணன் மற்றும் விழாக்குழுவினர், மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.