பனைக்குளம் : அழகன்குளம் பாவடிதெருவில் உள்ள சிதம்பர சுவாமிகள் என்ற பெரிய சுவாமியின் 91 வது குருபூஜை நடந்தது. சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. அழகிய நாயகி அம்மன் மகளிர் மன்றப்பொறுப்பாளர் பிரேமா தலைமையில் விளக்குபூஜை, பஜனைகள் நடந்தது. தெற்கூர் கே.பெரியசாமியின் "அடிகளாரின் பெருமை என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை செங்குந்தர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.