பழநி: பழநிகோயிலில் திருமுருக பக்தசபா சார்பில் கார்த்திகை பெருவிழா நடந்தது. திருக்கார்த்திகை விழாவைமுன்னிட்டு திருஆவினன்குடி கோயிலில் பகல் 12 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதைபோல பழநிமலைக்கோயில் ஞானதண்டாயுதபாணிக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. பகல் 2 மணிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமலைசாமி, பேராசிரியர் தேவி பக்தி இன்னிசை, சொற்பொழிவு நடந்தது. மாலை 6மணிக்கு 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.