புதியம்புத்தூர் : புதியம்புத்தூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா நடந்தது. கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் 1ம் தேதி மாலை 5 மணிக்கு நடந்தது. இரவு அந்தோணியார் அன்பியம் மற்றும் அன்னை தெரசா சபை சார்பாக தூய இஞ்ஞாசியார் ஜெப ஐக்கிய குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. அருளானந்தர் அன்பியம் மற்றும் மரியாயின் சேனை சார்பில் நற்செய்தி பெருவிழாவும், செசிலியம்மாள் பாடல் குழுவின் நிகழ்ச்சியும், நற்கருணை பவனியும், மறை மாவட்ட குருக்களின் கூட்டு திருப்பலியும், வி.பி.எஸ். கலைநிகழ்ச்சியும் கொடியேற்றின தினத்திலிருந்து தினசரி நடந்தது. கொடியிறக்க நாளிற்கு முந்தைய தினம் இரவு திருவிழா திருப்பலி, தேர்பவனி நடந்தது. மறுநாள் புதுநன்மை மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தனசேகர் நிர்வாக கமிட்டியினர் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.