பதிவு செய்த நாள்
25
மார்
2015
11:03
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கடம்பத்துார் அடுத்த, பேரம்பாக்கம் காமாட்சி அம்மன் உடனாய சோளீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தன. தொடர்ந்து, மாலை, சோமாஸ்கந்தர் சந்திரபிரபை வீதியுலா நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், 6:00 மணி முதல், 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், விழா துவங்கியது. பின், மாலை வாஸ்து சாந்தியும், அங்குரார்ப்பணமும், விநாயகர் வீதியுலாவும் நடந்தன. தொடர்ந்து, 11 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. செங்கல்பட்டு செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பங்குனி உத்திர திருவிழா நேற்று, துவங்கி, ஏப்ரல் 3 வரை நடைபெற உள்ளது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 6:00 மணிக்கு, கொடியேற்றமும் நடைபெற்றது.