கீழக்கரை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏப்.,3 ல்பங்குனி உத்திரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2015 12:03
கீழக்கரை: கீழக்கரை அருகே உள்ள தட்டார்மடம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை 11.30 மணிக்கு காப்புகட்டும் வைபவம் நடந்தது. முன்னதாக மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டன. ஏப்., 3 வெள்ளிக்கிழமையன்று காலை 7 மணி முதல் பால்குடம், காவடிகள் எடுக்கப்பட்டு கீழக்கரை உக்கிரவீரமாகாளியம்மன் கோயிலில் இருந்து தட்டார்மடம் சென்றடையும், மண்டகப்படிகளில் மூஷிகவாகனத்தில் விநாயகரும், மயில்வாகனத்தில் முருகனும் வீதியுலாவில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதற்கான ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்துவருகின்றனர்.