புதுடில்லி : சிட்னியில் இன்று நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஆமதாபாத், கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு யாகங்களும் நடத்தப்பட்டு வருகிறது.