கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2015 12:03
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாச்சலமூர்த்தி கோயில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 2 ல் தேரோட்டம், 4 ல் திருக்கல்யாண நிழ்ச்சியும் நடக்கிறது. கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. திருவனந்தல், விளா,காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 6 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதணை நடந்தது.பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. இரவு வள்ளி தெய்வாணையுடன் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏப்., 2 ம் தேதி காலை 4 மணிக்கு நடை திறப்பு, காலை 6 மணிக்கு சுவாமி வள்ளி, தெய்வாணையுடன் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காலை 10 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது . ஏப்., 4 ல் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.