கடலூர்: கடலூர், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரசன்ன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 23ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை முதல் கால யாக பூஜை மற்றும் பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை மற்றும் பூர்ணாகுதியைத் தொடர்ந்து காலை 9:30 மணிக்கு யாத்ரதானம், கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந் தது. அதனைத் தொடர்ந்து பிரசன்ன விநாயகருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இன்று முதல் மண்டலாபிஷேகம் துவங்குகிறது.