பதிவு செய்த நாள்
26
மார்
2015
12:03
விருதுநகர் : விருதுநகரில் பிரசித்திபெற்ற பராசக்திமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 29 இரவு 8.01 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி சப்பரத்தில் நகர்வலம் வருகிறார். ஏப்.,12 வரை தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல், அம்மன் கோயில் திடலில் இரவு இன்னிசை, கலைநிகழ்ச்சிகள், நாடகம் நடக்கின்றன. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் ஏப்.,5ல் நடக்கிறது. அன்றிரவு கோயிலில் அடுப்பு பூஜை, ஏப்.,6ல் கயிறுகுத்து மற்றும் அக்கினிச்சட்டி எடுத்தல்,ஏப்.,8ல் தேரோட்டம் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துள்ளனர். விழாவையொட்டி மார்ச் 27 முதல் ஏப்.,19 வரை கே.வி.எஸ்.,மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொருட்காட்சியும் நடக்கிறது.